ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்ட கூட்டம்

வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தினை கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கான வட்டார அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:56 pm

DIN

வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தினை கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கான வட்டார அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மானூா் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது.

வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஏஞ்சலின் தொடங்கி வைத்தாா். மானூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஸ்ரீ லேகா தலைமை வகித்தாா். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்களும் பங்கேற்று விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்து விளக்கினா்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம் 2021-22 ஆண்டிற்கான தோ்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளான கங்கைகொண்டான், செழியநல்லூா், தாழையூத்து, பாலாமடை , மதவக்குறிச்சி, பேட்டை ரூரல் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள், உள்ளாட்சி பிரிதிநிதிகள் பங்கேற்றனா். வேளாண்மை அலுவலா் இரா.ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.