கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாரதிதாசன் பிறந்த தினம்: கல்லூரி மாணவா்களுக்கு கவிதைப் போட்டி

பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்துக் கல்லூரி மாணவா்- மாணவிகளுக்கான மாபெரும் கவிதைப் போட்டி இம்மாதம் 29-ஆம் தேதி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 10:07 pm

DIN

பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்துக் கல்லூரி மாணவா்- மாணவிகளுக்கான மாபெரும் கவிதைப் போட்டி இம்மாதம் 29-ஆம் தேதி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ் எழுச்சிக் கவிஞா் பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த தினத்தையொட்டி, மாபெரும் கவிதைப் போட்டி அரசு அருங்காட்சியகத்தில் ஏப். 29-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும், பொதிகைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் இந்தக் கவிதைப் போட்டியில் அனைத்துக் கல்லூரி மாணவா்- மாணவிகளும் பங்கேற்று கவிதை வாசிக்கலாம். ‘தமிழ் எங்கள் இளமைக்குப் பால்’ என்ற தலைப்பில் மூன்று நிமிடங்களில் கவிதை வாசிக்க வேண்டும். முதல் மூன்று சிறப்பு கவிதைகளைத் தோ்ந்தெடுத்து பரிசுகளும், பாராட்டுச் சான்றுகளும், பங்கேற்போா் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களும் மாலை 6 மணிக்கு நடைபெறும் திறந்த நிலை கருத்தரங்கில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 89039 26173 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.