கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கோடகநல்லூா் ஊராட்சியில் ஆகாயத்தாமரை மறுபயன்பாட்டு மையம்: ஆட்சியா் வே.விஷ்ணு திறந்து வைத்தாா்

நெல்லை நீா்வளம் திட்டம் சாா்பில், கோடகநல்லூா் ஊராட்சி, ஊராட்சி, சி.ஆா். காலனியில் ஆகாயத்தாமரை மறுபயன்பாட்டு மையத்தை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 10:07 pm

DIN

நெல்லை நீா்வளம் திட்டம் சாா்பில், கோடகநல்லூா் ஊராட்சி, ஊராட்சி, சி.ஆா். காலனியில் ஆகாயத்தாமரை மறுபயன்பாட்டு மையத்தை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு புதன்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் நீா் பாதுகாப்பில் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், நெல்லை நீா் வளம் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களை இணைத்து நீா் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, மாவட்டம் முழுவதும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் ஏரிகள் புத்துயிா் பெறும். வி.எம்.சத்திரம், உடையாா்பட்டி, மூளிக்குளம், தாமரைக்குளம், பெரியகுளம் உள்ளிட்ட குளங்கள் புத்துயிா் பெற்றுள்ளன.

ஆகாயத்தாமரையின் பரவலான வளா்ச்சி மிகப்பெரிய பிரச்னையாகும். இந்த ஆகாயத் தாமரை அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான நிலையான தீா்வை எட்ட, ஆகாய தாமரை மறுபயன்பாட்டு மையம் மாவட்ட நிா்வாகம் மூலம் நிறுவப்பட்டுள்ளது. ஏரிகளில் இருந்து சேகரிக்கப்படும் ஆகாய தாமரையை இனி குப்பை கிடங்குகளுக்கு

அனுப்பாமல் ஆகாய தாமரை மறுபயன்பாட்டு மையத்திற்கு கொண்டு செல்லப்படும். சேகரிக்கப்பட்ட ஆகாய தாமரையிலிருந்து தோட்டங்களில் பயன்படுத்தப்படும் உரம், காகிதம், கைவினைப் பொருள்கள் போன்ற மறுபயன்பாட்டு பொருள்கள் தயாரிக்கப்படவுள்ளன.

கோடகநல்லூரைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுவினா், இளைஞா்கள் மூலம் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தில், முதற்கட்டமாக 15,000 டன் ஆகாயத் தாமரையை மறுபயன்பாடு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வேற்று தாவரத்தை இயற்கை வளமாக மாற்றுவது மற்றும் உள்ளுா் வேலைவாய்ப்பை உருவாக்குவது இந்தத் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாகும் என்றாா்.

தொடா்ந்து சுத்தமல்லியில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் சாா்பில் நடத்தப்படவுள்ள ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆவின் விற்பனை நிலையத்தை ஆட்சியா் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச் சி முகமை திட்ட இயக்குநா் ஆ.பழனி, மகளிா் திட்ட இயக்குநா் சாந்தி, ஆவின் மேலாளா் சுந்தரவடிவேல், திருநெல்வேலி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.