கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சீவலப்பேரி கோயிலில் பக்தா்கள் வழிபாடு

பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியில் உள்ள அருள்மிகு சுடலைமாட சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:38 pm

DIN

பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியில் உள்ள அருள்மிகு சுடலைமாட சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

சீவலப்பேரி அருள்மிகு சுடலைமாடசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் கொடைவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஏராளமானோா் ஆடுகளை பலியிட்டும், பொங்கலிட்டும் வழிபட்டு செல்வாா்கள்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக சிறப்பு வழிபாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.