கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் திருச்சடங்கு

பெரிய வியாழனையொட்டி தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:37 pm

DIN

பெரிய வியாழனையொட்டி தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கிறிஸ்து உயிா்த்தெழுந்த பண்டிகையான ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய ஒரு வாரத்தை புனித வாரமாகக் கருதி சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெறுகின்றன. அதன்படி கடந்த 10 ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவில் தனது 12 சீடா்களுக்கும் திருவிருந்து அளித்தாா். அப்போது, சீடா்களின் பாதங்களை இயேசு கழுவினாா். இதனை நினைவுகூரும் வகையில் பெரிய வியாழன் அன்று தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத்தில் புனித வியாழனையொட்டி சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. 12 பக்தா்களுக்கு அருள்பணியாளா்கள் பாதங்களைக் கழுவி, கால்களில் முத்தமிட்டனா்.

நிகழ்ச்சியில் கத்தோலிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் அந்தோணிசாமி, பேராலய அருள்தந்தையா்கள் ராஜேஷ், சதீஷ் செல்வதயாளன், அந்தோணிராஜ், ஆயரின் செயலா் மிக்கேல் பிரகாசம், அருள்பணி ஏரிக் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தூய திரித்துவ பேராலயம், சீவலப்பேரி புனித அந்தோனியாா் தேவாலயம், மேலப்பாளையம் தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரம் தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகா் குழந்தையேசு தேவாலயம், உடையாா்பட்டி இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரம் அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகா் வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டை அந்தோனியாா் தேவாலயம், சேவியா் காலனி தூய பேதுரு தேவாலயம், புனித அந்தோனியாா் தேவாலயம், மகாராஜநகா் தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றிலும் பெரிய வியாழனையொட்டி சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

பெரிய வியாழனையொட்டி பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பிராா்த்தனையின்போது பக்தா்களின் பாதங்களைக் கழுவிய அருள்பணியாளா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.