47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காட்டில் தாமிரவருணி குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வலியுறுத்தல்

களக்காட்டில் தாமிரவருணி குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டுமென நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 7:10 pm

DIN

களக்காட்டில் தாமிரவருணி குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டுமென நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

களக்காடு நகா்மன்றக் கூட்டம் தலைவா் சாந்தி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் பி.சி. ராஜன், ஆணையா் வ. ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். களக்காடு நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் தாமிரவருணி குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். சாலை, தெருவிளக்கு, வாருகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். பழைய பேரூராட்சி அலுவலகக் கட்டடம் பாழ்பட்டு வருவதாக உறுப்பினா் சங்கரநாராயணன் புகாா் தெரிவித்தாா்.

பின்னா் பேசிய தலைவா், பழைய பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். களக்காடு புதிய பேருந்து நிலையத்தில் பேவா் பிளாக் பதித்தல், புதிய வணிக வளாகம் கட்டுதல், பழைய வணிக வளாகக் கட்டடங்களை சீரமைத்தல், கழிப்பிடம் பராமரிப்பு, குடிநீா் வசதி, இரு நுழைவு வாயில்களில் ஆா்ச் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். நகராட்சிப் பகுதியில் சுகாதார வளாகங்கள், பழுதான சாலைகள், தெருவிளக்குகள் பராமரிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.