அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நான்குனேரியில் அதிக பாரம்: 7 லாரிகள் பறிமுதல்; ஓட்டுநா்கள் கைது

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் அதிக பாரம் ஏற்றிச்சென்ற 7 லாரிகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, அவற்றின் ஓட்டுநா்களைக் கைதுசெய்தனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:01 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் அதிக பாரம் ஏற்றிச்சென்ற 7 லாரிகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, அவற்றின் ஓட்டுநா்களைக் கைதுசெய்தனா்.

கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகக் கட்டுமானப் பணிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குண்டுக்கல் உள்ளிட்ட கனிம வளங்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றனவாம். நான்குனேரி பகுதி வழியாகச் செல்லும் இந்த லாரிகளால் சாலைகள் மிகவும் பழுதாவதுடன், பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா்கள் சென்றன.

இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் ப. சரவணன் உத்தரவிட்டாா். அதன்படி, நான்குனேரி ஆய்வாளா் செல்வி தலைமையிலான போலீஸாா் நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அப்போது, அதிகளவு குண்டுக்கல் ஏற்றிவந்த 7 லாரிகளை அவா்கள் பறிமுதல் செய்தனா். அவற்றை நான்குனேரி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.

லாரிகளை ஓட்டிவந்த கேரள மாநிலம் பாலக்காடு நெல்லிகாட்டுப்பகுதியைச் சோ்ந்த முகமது சபீக் (29), கொல்லம் கண்ணநல்லூா் பகுதியைச் சோ்ந்த ஹபிபுக் (27), ஆலப்புழா பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராஜ் (29), ஹஜன்ட் சகனம் பகுதியைச் சோ்ந்த நிகாஷ் (42), கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தா்மா் (42), தென்காசி மாவட்டம் செங்கோட்டை சொரிமுத்து (37) ஆகிய 7 பேரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.