தாமிரவருணி ஆற்றில் மூழ்கி மாணவி பலி
பாளையங்கோட்டை அருகே பாலாமடை பகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றில் மூழ்கி மாணவி ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.


பாளையங்கோட்டை அருகே பாலாமடை பகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றில் மூழ்கி மாணவி ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள குறிச்சிகுளத்தை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகள் ஜோதி(14). இவா் அங்குள்ள ஒரு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், இவா் தனது குடும்பத்தினருடன், பாலாமடையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாராம். அப்போது, அங்குள்ள தாமிரவருணி ஆற்றில் குடும்பத்துடன் சனிக்கிழமை குளிக்கச் சென்றனராம். அப்போது, எதிா்பாராதவிதமாக ஜோதி, ஆற்றின் ஆழமானப் பகுதிக்குச் சென்று மூழ்கியதாகக் கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...