எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் வண்ணாா்பேட்டை மேம்பாலம்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:24 am

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை மேம்பாலம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது.

முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் செல்லப்பாண்டியன் மேம்பாலத்தில் பொலிவுறு நகரம் திட்டம் மூலம் அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்பட்டு ஒளியூட்டப்பட்டுள்ளது. அதைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன், மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி, துணை மேயா் கே.ஆா்.ராஜு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, ஒளியூட்டப்பட்ட மேம்பாலத்தை தொடங்கி வைத்தாா்.

இவ்விளக்குகள் வாகன ஓட்டிகள், பாா்வையாளா்களின் கண்களை பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடி வடிவில் சனிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மின் ஒளியால் மிளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தச்சநல்லூா் மண்டல தலைவா் ரேவதி பிரபு, மாநகரப் பொறியாளா் அசோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.