47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரூ. 4 லட்சம் வாடகை பாக்கி: பாபநாசத்தில் 2 கோயில் கடைகளுக்கு சீல்

பாபநாசம் கோயிலுக்குச் சொந்தமான கடைகளுக்கு ரூ. 4 லட்சம் வாடகை பாக்கி இருந்ததையடுத்து, இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 7:20 pm

DIN

பாபநாசம் கோயிலுக்குச் சொந்தமான கடைகளுக்கு ரூ. 4 லட்சம் வாடகை பாக்கி இருந்ததையடுத்து, இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள பாபநாசம் கோயிலுக்குச் சொந்தமான கடைகள் பாபநாசம் மற்றும் அகஸ்தியா் அருவி பகுதிகளில் உள்ளன. இவற்றில் ஆண்டு வாடகைக்கு எடுத்து கடை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் விக்கிரமசிங்கபுரம் சன்னதித் தெரு கணேசன் பாபநாசம் கோயில் முகப்பில் உள்ள கடையை நடத்தி வந்த நிலையில் ரூ. 1.70 லட்சம் வாடகை பாக்கியும், பாபநாசம், பொதிகையடி கணேசன் அகஸ்தியா் அருவி பகுதியில் உள்ள கடைக்கு ரூ. 2.12 லட்சம் வாடகை பாக்கி செலுத்த வேண்டியிருந்ததாம்.

இதையடுத்து, இவ்விரு கடைகளை அறநிலையத்துறை துணை ஆணையா் சங்கா் சீல் வைக்க உத்தரவிட்டதையடுத்து,

ஆய்வாளா் கோமதி, பாபநாசம் கோயில் செயல் அலுவலா் ஜெகன்னாதன் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரண்டு கடைகளுக்கும் சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.