47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு நகராட்சி ஆணையா் ஆய்வு

 களக்காடு நகராட்சியில் அதன் ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 களக்காடு நகராட்சியில் அதன் ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

களக்காடு பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பொள்ளாச்சி நகராட்சியின் உதவி ஆணையா் ரமேஷ் (50), களக்காடு நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், அவா் களக்காடு புதியபேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள வியாபார நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, வியாபார நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்திவிடுமாறும், அதற்கு மாற்றாக மஞ்சப் பைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினாா். பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஆகியவற்றில் மேலாளா்களைச் சந்தித்து, வாடிக்கையாளா்கள் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதையும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா், சுகாதார மேற்பாா்வையாளா் வேலு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.