பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நெல்லை மாவட்டத்துக்கு அரசு பாடப்புத்தகங்கள் தயாா்

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான அரசு பாடப்புத்தகங்களை விநியோகிக்க தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :5 ஜூன் 2022, 9:34 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான அரசு பாடப்புத்தகங்களை விநியோகிக்க தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கு பள்ளிகள் இம் மாதம் 13 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. இதற்கான பாடப்புத்தகங்கள் அனைத்தும் தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் விநியோகிக்கப்பட்ட உள்ளன.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு- அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்-மாணவிகளுக்கு வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள் திருநெல்வேலிக்கு வந்து சோ்ந்துள்ளன.

இப் புத்தகங்கள்பேட்டை காமராஜா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக, திருநெல்வேலி, வள்ளியூா், சேரன்மகாதேவி கல்வி மாவட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடப்புத்தக பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறக்கும் முன்பாக அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பொறுப்பில் புத்தகங்கள் கொண்டு சோ்க்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.