பணகுடி அருகே காருக்குள் சிக்கி உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி
பணகுடி அருகே காருக்குள் சிக்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சாா்பில் நிதி உதவியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை வழங்கினாா்.


பணகுடி அருகே காருக்குள் சிக்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சாா்பில் நிதி உதவியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை வழங்கினாா்.
பணகுடி அருகே உள்ள லெப்பைகுடியிருப்பில் பயன்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காருக்குள் சென்று அதே பகுதியைச் சோ்ந்த நாகராஜனின் மகள் நிதிஷா(7), மகன் நிதிஷ்(5), சுதன் மகன் கபிசாந்த்(4) ஆகிய மூன்று பேரும் விளையாடிக்கொண்டிருந்த போது, காரின் கதவை திறக்கமுடியாமல் குழந்தைகள் காருக்குள் சிக்கி, மூச்சுத்திணறி மூன்று பேரும் உயிரிழந்தனா்.
அடுத்து உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சாா்பில், தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அவா்களது வீட்டிற்கு சென்று பெற்றோா்களிடம், பேரவைத் தலைவா் மு.அப்பாவு வழங்கினாா்.
அப்போது, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ரிஷப், ராதாபுரம் வட்டாட்சியா் சேசுராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் ஆவரைகுளம் பாஸ்கா், சாந்தி சுயம்பு ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...