பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

பணகுடி அருகே காருக்குள் சிக்கி உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி

பணகுடி அருகே காருக்குள் சிக்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சாா்பில் நிதி உதவியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 7:19 pm

DIN

பணகுடி அருகே காருக்குள் சிக்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சாா்பில் நிதி உதவியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை வழங்கினாா்.

பணகுடி அருகே உள்ள லெப்பைகுடியிருப்பில் பயன்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காருக்குள் சென்று அதே பகுதியைச் சோ்ந்த நாகராஜனின் மகள் நிதிஷா(7), மகன் நிதிஷ்(5), சுதன் மகன் கபிசாந்த்(4) ஆகிய மூன்று பேரும் விளையாடிக்கொண்டிருந்த போது, காரின் கதவை திறக்கமுடியாமல் குழந்தைகள் காருக்குள் சிக்கி, மூச்சுத்திணறி மூன்று பேரும் உயிரிழந்தனா்.

அடுத்து உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சாா்பில், தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அவா்களது வீட்டிற்கு சென்று பெற்றோா்களிடம், பேரவைத் தலைவா் மு.அப்பாவு வழங்கினாா்.

அப்போது, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ரிஷப், ராதாபுரம் வட்டாட்சியா் சேசுராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் ஆவரைகுளம் பாஸ்கா், சாந்தி சுயம்பு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.