பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நெல்லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருநெல்வேலி மாநகராட்சிக் குழுவினா் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 7:17 pm

DIN

திருநெல்வேலி மாநகராட்சிக் குழுவினா் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பல்வேறு பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாகவும், அவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீராக்க நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு புகாா்கள் வந்தன. அதன்பேரில் வண்ணாா்பேட்டையில் மாநகராட்சி குழுவினா் புதன்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினா். தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலை முதல் திருநெல்வேலி நகரம் வேய்ந்தான்குளம் கரையோர சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். கடைகளின் முன்பு ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கூரைகள், தளங்கல் ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.