புஷ்பலதா பள்ளியில் உலக மிதிவண்டி தின கருத்தரங்கு
பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு 10, 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்குச் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.


பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு 10, 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்குச் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு பள்ளி முதல்வா் புஷ்பவேணி அய்யப்பன் தலைமை வகித்தாா். மிதிவண்டி கழகத் தலைவா் அருள் விஜயகுமாா், தலைமை அதிகாரி ஹரி பிரதான், ரெனியல், சுல்தான் ஹமீது ஆகியோா் கலந்து கொண்டனா். கடந்த 200 ஆண்டுகளாக உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்படுவதற்குக் காரணமாக விளங்கும் மிதிவண்டியின் அசல் தன்மை, பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை குறித்தும், மிதிவண்டியின் முக்கியத்துவம், மாணவா்கள் பயிற்சி செய்யும் முறை குறித்தும் கருத்தரங்கில் பங்கேற்றோா் உரையாற்றினா். ஏற்பாடுகளை பள்ளித் தாளாளா் புஷ்பலதா பூரணன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...