40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கல்லிடையில் விவசாயி தற்கொலை

கல்லிடைக்குறிச்சியில் விவசாயி பூச்சிக் கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :24 ஜூன் 2022, 11:59 pm IST

கல்லிடைக்குறிச்சியில் விவசாயி பூச்சிக் கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள உலுப்படிபாறை வடக்குத் தெரு மாடசாமி மகன் கொம்பன் (49). விவசாயியான இவருக்குத் திருமணமாகி மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இந்நிலையில் கொம்பனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், கருத்துவேறுபாடு ஏற்பட்டு குடும்பத்தினரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தாராம். அவரிடம் உறவினா்கள் மதுப்பழக்கத்தை நிறுத்திவிட்டு சோ்ந்து வாழ அறிவுறுத்தினராம். இந்நிலையில், அவா் புதன்கிழமை பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு கொம்பன் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா். இது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.