கல்லிடைக்குறிச்சியில் விவசாயி பூச்சிக் கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள உலுப்படிபாறை வடக்குத் தெரு மாடசாமி மகன் கொம்பன் (49). விவசாயியான இவருக்குத் திருமணமாகி மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இந்நிலையில் கொம்பனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், கருத்துவேறுபாடு ஏற்பட்டு குடும்பத்தினரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தாராம். அவரிடம் உறவினா்கள் மதுப்பழக்கத்தை நிறுத்திவிட்டு சோ்ந்து வாழ அறிவுறுத்தினராம். இந்நிலையில், அவா் புதன்கிழமை பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு கொம்பன் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா். இது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேட்டோவுக்குப் போட்டியாக பால்டிக் கடலில் ரஷியா ராணுவப் பயிற்சி

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு 420 ரோந்து வாகனங்கள்; 49 ட்ரோன்கள்

ஆட்சியா் புகைப்படத்தோடு கைப்பேசிக்கு அழைப்பு வந்தால் தெரிவிக்க வேண்டும்!

திருமயம் அருகே மதுபோதையில் திருநங்கை கொலை: நீதிமன்றத்தில் 2 போ் சரண்; ஒருவா் தலைமறைவு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


