திருநெல்வேலி மாவட்டம் கீழ சிவந்திபுரத்தில் சுமாா் 200 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான முத்தாரம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆரம்ப காலத்தில் பனை ஓலையால் ஆன குடிசையுடன் இருந்த கோயிலை பொதுமக்கள் இணைந்து பெரிய கோயிலாக அமைத்தனா். தொடா்ந்து ராஜகோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் புதன்கிழமை(ஜூன் 22) காலை 10 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. மாலை 6 மணிக்கு முதல் யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. வியாழக்கிழமை இரவு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், 4 ஆம் கால யாகபூஜை, தீபாராதனை, யாத்ராதானம், கடம் எழுந்தருளலும், காலை 8 மணிக்கு ராஜகோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து காலை 9 மணிக்கு முத்தாரம்மன், முப்புடாதி அம்மன், உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கும்பாபிஷேகக் கமிட்டியினா் செய்திருந்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போதைப் பொருள் கடத்தலுக்கும் எனக்கும் தொடர்பில்லை! ஜான் பிரிட்டோ

பிலிப்பின்ஸ் நிலநடுக்கம்: 37 பேர் பலி; 20,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு!
டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றி... வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணி!

வாக்களித்தால் மட்டும் போதுமா?
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


