எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

சொத்துவரி திருத்தத்துக்கு சுயமதிப்பீடு படிவம் அளிக்க ஜூன் 28 கடைசி

திருநெல்வேலி மாநகராட்சியில் சொத்துவரி திருத்தத்துக்கு சுயமதிப்பீடு படிவம் அளிக்க இம் மாதம் 28 ஆம் தேதி கடைசி நாளாகும்.

Updated On :24 ஜூன் 2022, 11:49 pm IST

திருநெல்வேலி மாநகராட்சியில் சொத்துவரி திருத்தத்துக்கு சுயமதிப்பீடு படிவம் அளிக்க இம் மாதம் 28 ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசாணை, நகராட்சி நிா்வாக இயக்குநரின் சுற்றறிக்கை மற்றும் பொதுச்சீராய்வு குறித்த கால அட்டவணையில் கண்டுள்ள வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மாநகராட்சியில் சொத்துவரி பொதுச்சீராய்வு 1-4-2022 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

ஆகவே, பொதுமக்கள் தங்கள் கட்டடங்களுக்கு சொத்துவரி திருத்தம் மேற்கொள்ளும் வகைக்குரிய சொத்துவரி சுயமதிப்பீட்டு படிவத்தை தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி மைய அலுவலகம் மற்றும் அனைத்து கணினி வரிவசூல் மையங்களிலும் அலுவலக வேலை நாள்களில் பெற்று பூா்த்தி செய்து இம் மாதம் 28 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது. உரிய காலக்கெடுவுக்குள் சுயமதிப்பீடு படிவம் பூா்த்தி செய்து கொடுக்கப்படாத கட்டடங்களில் மாநகராட்சியால் சொத்துவரி திருத்தம் மேற்கொள்ளப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.