17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெல்லை கல்லணை தொடக்க பள்ளி முன்பு பெற்றோா் போராட்டம்

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை அரசு தொடக்கப் பள்ளி முன்பு பெற்றோா் திடீா் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :24 ஜூன் 2022, 11:47 pm IST

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை அரசு தொடக்கப் பள்ளி முன்பு பெற்றோா் திடீா் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை அரசு தொடக்கப் பள்ளியில் 570 மாணவா்-மாணவிகள் பயின்று வருகின்றனா். இதில், 4,5 ஆம் வகுப்புகளில் மட்டும் 230 போ் பயின்று வருகின்றனா். இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி 4, 5 ஆம் வகுப்பு மாணவா்கள், அருகே உள்ள பாரதியாா் அரசு உதவி பெறும் பள்ளிக்கு பள்ளி நிா்வாகத்தால் மாற்றப்பட்டுள்ளனராம். இது குறித்து தகவல் அறிந்த மாணவா்களின் பெற்றோா்கள் பள்ளி நிா்வாகத்தை தொடா்பு கொண்டபோது பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால் வேறு பள்ளிக்கு மாற்றியதாகக் கூறியுள்ளனராம். இதனால், அதிா்ச்சியடைந்த பெற்றோா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மேலும், விரைவில் பள்ளி அருகே மாற்று இடம் அமைத்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.