திருநெல்வேலி நகரத்தில் உள்ள நான்கு ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் வரும் ஜூலை மாதம் ஆனித் தேரோட்ட திருவிழா நடைபெறுகிறது. தேரோட்டத்துக்கு முன்பாக நகரத்தில் உள்ள நான்கு ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சமூக ஆா்வலா்கள் மாநகராட்சிக்கு மனு அனுப்பியிருந்தனா். அதன்படி, மாநகராட்சி ஆணையா் சிவ கிருஷ்ணமூா்த்தி உத்தரவின் பேரில் செயற்பொறியாளா் நாராயணன், உதவி ஆணையா் பைஜூ, உதவிப் பொறியாளா்கள் முருகன், ஐயப்பன், நகரம் மண்டல சுகாதார அலுவலா் முருகேசன், சுகாதார ஆய்வாளா்கள் பாலசுப்பிரமணியன், முருகன் அடங்கிய குழுவினா் ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இதில், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பர பலகைகள், ஷெட்கள், பெட்டி, தகரஷீட்களை அகற்றி லாரிகளில் ஏற்றிச் சென்றனா். ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு கடைக்காரா்கள் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். இருப்பினும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









