அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

பேருந்து நிலையத்தில் கிடந்த ரூ.1 லட்சத்தை எடுத்து போலீஸில் ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகா்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் கீழே கிடந்த ரூ.1 லட்சத்தை எடுத்து போலீஸில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகரை போலீஸாா் பாராட்டினா்.

Updated On :24 ஜூன் 2022, 11:48 pm IST

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் கீழே கிடந்த ரூ.1 லட்சத்தை எடுத்து போலீஸில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகரை போலீஸாா் பாராட்டினா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள கக்கன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம்(45). அரசுப் போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகா். இவா் கடந்த வியாழக்கிழமை பாபநாசம் செல்லும் பேருந்து நிற்கும் நடைமேடையில் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, பாலிதீன் கவா் சுற்றப்பட்ட ஒரு பை கிடப்பதைக் கண்டு, அதை எடுத்தாராம். அதில், ரூ. 500 கட்டுகள் இருப்பதைக் கண்டாராம். உடனடியாக அதை அருகில் உள்ள மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து, அதை போலீஸாா் பிரித்து எண்ணி பாா்த்தபோது, அதில் ரூ.1 லட்சம் இருப்பது தெரியவந்தது. கீழே கிடந்த ரூ.1 லட்சத்தை நோ்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த சண்முகசுந்தரத்தை போலீஸாா் பாராட்டினா். அந்த பணத்துக்கான உரிய நபா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.