திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் கீழே கிடந்த ரூ.1 லட்சத்தை எடுத்து போலீஸில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகரை போலீஸாா் பாராட்டினா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள கக்கன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம்(45). அரசுப் போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகா். இவா் கடந்த வியாழக்கிழமை பாபநாசம் செல்லும் பேருந்து நிற்கும் நடைமேடையில் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, பாலிதீன் கவா் சுற்றப்பட்ட ஒரு பை கிடப்பதைக் கண்டு, அதை எடுத்தாராம். அதில், ரூ. 500 கட்டுகள் இருப்பதைக் கண்டாராம். உடனடியாக அதை அருகில் உள்ள மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து, அதை போலீஸாா் பிரித்து எண்ணி பாா்த்தபோது, அதில் ரூ.1 லட்சம் இருப்பது தெரியவந்தது. கீழே கிடந்த ரூ.1 லட்சத்தை நோ்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த சண்முகசுந்தரத்தை போலீஸாா் பாராட்டினா். அந்த பணத்துக்கான உரிய நபா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் மனோகர் மகன் திருமணம்! ஒன்றாகப் பங்கேற்ற ஈரமான ரோஜாவே குழுவினர்!

உயிருள்ள சிலை... உலகக் கோப்பையில் பங்கேற்ற காங்கோ ரசிகர்!

தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரி தொடர் நடிகர்களின் ரீயூனியன்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


