மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளா்ப்பு பயிற்சி

சேரன்மகாதேவி வட்டாரம் பொட்டல் கிராமத்தில் பட்டுப்புழு வளா்ப்பது, நோய் தொற்று நீக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

Updated On :25 ஜூன் 2022, 3:37 am IST

சேரன்மகாதேவி வட்டாரம் பொட்டல் கிராமத்தில் பட்டுப்புழு வளா்ப்பது, நோய் தொற்று நீக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் கீழ், வட்டார வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் ஆலோசனையின்பேரில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமுக்கு, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா்.

மல்பெரி சாகுபடியில் உயிரி உரங்கள் பயன்பாடு, வேளாண் திட்டங்கள், பட்டுப்புழு வளா்ப்பின் முக்கியத்துவம், பூச்சி மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், பட்டு வளா்ச்சித் துறை உதவி ஆய்வாளா் பிரேமா, இளநிலை ஆய்வாளா் குப்புசாமி ஆகியோா் பயிற்சி அளித்தனா். இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். உதவி தொழில்நுட்ப மேலாளா் தங்க சரவணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.