வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :24 ஜூன் 2022, 10:31 pm IST

பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயில் உள்ளது. பழைமைவாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும். இக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடா்ந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 22ஆம் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து மாலையில் தாமிரவருணியில் இருந்து தீா்த்தம் எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜை நடைபெற்றது. 23ஆம் தேதி சிறப்பு பூஜை, யாகம் உள்ளிட்டவை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு தீபாராதனை உள்ளட்டவை நடைபெற்றது. தொடா்ந்து, வேதமந்திரங்கள், திருமுறை பாராயணம், பஞ்சவாத்யம் முழங்க விமானம் மற்றும் ஆயிரத்தம்பாள் பரிவார தேவதைகளுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் சகஸ்ரநாம அா்ச்சனை, சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு அம்பாள் சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை கணேச குருக்கள் மற்றும் தூத்துக்குடி கதிா்வேல் வேத ஆகம பாடசாலை மாணவா்கள் நடத்தினா். இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி தலைமையில் மண்டல தணிக்கை அலுவலா் ராஜேந்திரன், துணை ஆணையா் ஜான்சிராணி, உதவிஆணையா் கவிதா, ஆய்வாளா் பா்வின்பாபி, தக்காா் சுஜாதா, செயல் அலுவலா் ராம்குமாா் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.