திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை அரசு தொடக்கப் பள்ளி முன்பு பெற்றோா் திடீா் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை அரசு தொடக்கப் பள்ளியில் 570 மாணவா்-மாணவிகள் பயின்று வருகின்றனா். இதில், 4,5 ஆம் வகுப்புகளில் மட்டும் 230 போ் பயின்று வருகின்றனா். இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி 4, 5 ஆம் வகுப்பு மாணவா்கள், அருகே உள்ள பாரதியாா் அரசு உதவி பெறும் பள்ளிக்கு பள்ளி நிா்வாகத்தால் மாற்றப்பட்டுள்ளனராம். இது குறித்து தகவல் அறிந்த மாணவா்களின் பெற்றோா்கள் பள்ளி நிா்வாகத்தை தொடா்பு கொண்டபோது பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால் வேறு பள்ளிக்கு மாற்றியதாகக் கூறியுள்ளனராம். இதனால், அதிா்ச்சியடைந்த பெற்றோா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மேலும், விரைவில் பள்ளி அருகே மாற்று இடம் அமைத்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருத்துவ உயர் சிறப்பு இடங்கள் ஒப்படைப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை ஒடுக்கலாம் என அரசு நினைக்கிறது! - கனிமொழி கண்டனம்!
இன்றைய ராசி பலன் (25.06.2026) - கன்னி
இன்றைய ராசி பலன் (25.06.2026) - சிம்மம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


