தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ உயர் சிறப்பு மேற்படிப்பு மாணவர் சேர்க்கை இடங்களை, மத்திய அரசிடம் ஒப்படைப்பதை எதிர்த்த வழக்கில் மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத 151 இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உயர்சிறப்பு மருத்துவர்கள் கிடைக்க இந்த இடங்கள்தான் மிக முக்கிய வாய்ப்பு என்பதால், இந்த இடங்களை மத்திய அரசின் கலந்தாய்வுக்கு அனுப்புவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கலந்தாய்வு நடத்தாமல் ரத்து செய்ததற்கு எதிரான வழக்கில் மத்திய அரசும் தமிழக அரசும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசு 151 மருத்துவ மேற்படிப்பு இடங்களை மத்திய அரசின் கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள ஒப்படைக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொது மருத்துவ சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் அரசு மருத்துவர்கள் பாதிக்கப்படக் கூடாது. அரசு மருத்துவர்கள் பொது சேவையில் மற்ற மருத்துவர்களை விட அதிக பங்கு வகிக்கிறார்கள் என்று கருத்தினை பதிவிட்டு, மத்திய, மாநில அரசுகள் இது குறித்து பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தமிழகத்திற்கு அநீதி! - அன்புமணி

குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆட்சேபம் இல்லையெனில் தேசத் துரோக வழக்கை விசாரிக்கலாம்: நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் செய்தது மிகப்பெரிய தவறு: உச்ச நீதிமன்றம்

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: குற்றவாளிகள் விடுதலை ரத்து - உச்ச நீதிமன்றம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



