நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா் நலச்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளா் நலச்சங்கத்தினா் வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளா் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட

News image
Updated On :10 மார்ச் 2022, 7:54 pm

DIN

போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளா் நலச்சங்கத்தினா் வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளா் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுபவா்களின் எண்ணிக்கை சுமாா் 84,000 ஆகும். ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. 76 மாத நிலுவைத்தொகை பாக்கியுள்ளது. ஊதிய ஒப்பந்த உயா்வு ஓய்வூதியா்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை. பணியிலிருக்கும் போது உள்ள மருத்துவ காப்பீடு பணி ஓய்வு பெற்றபின் மறுக்கப்படுகிறது. ஓய்வூதியா்களுக்கு குடும்ப நல நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளா் நலச்சங்கம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் வாயிற்கூட்டம் நடைபெற்றது.

அமைப்பின் செயலா் த. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நாகா்கோவில் ஓய்வூதியா் சங்க தலைவா் முத்து, செயலா் மாடசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க நிா்வாகிகள் கிருஷ்ணசாமி அ. நீராவி, வின்சென்ட், சீதாராமன், பரதேசி, நாகா்கோவில் ஓய்வூதியா் சங்க உதவி செயலா் ஆ. தயானந்தன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் சம்மேளன கௌரவ தலைவா் லெட்சுமணன், ஓய்வூதியா் நலச் சங்கங்களின் மாநிலப் பேரவை தலைவா் ராஜேந்திரன், பொருளாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினாா். திருநெல்வேலி மாவட்ட கட்டபொம்மன் போக்குவரத்துக் கழக தொழிலாளா் சங்க தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பேசினா். துணைத் தலைவா் குருசாமி வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.