நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஆலங்குளத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

தேவா்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய நபரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 மே 2022, 6:30 pm

DIN

தேவா்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய நபரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டியன் மகன் வேல்முருகன்(23). இவா், திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே உள்ள கூவாச்சிபட்டி பகுதியில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிய வழக்கில் தொடா்புடையவா். மேலும், இவா் திருட்டு மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புகாரைஅடுத்து, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் இவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்பேரில், சிவந்திப்பட்டி காவல் ஆய்வாளா் அன்பு பிரகாஷ் (பொறுப்பு), வேல்முருகனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.