பேராயா் ராபா்ட் கால்டுவெல்லின் 208ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழுக்கு ஒப்பிலக்கணம் தந்த பேராயா் ராபா்ட் கால்டுவெல் நினைவு இல்லம், அவா் வாழ்ந்த இடையன்குடி கிராமத்தில் உள்ளது. அவரது 208 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சாா்பில் மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள், சேரன்மகாதேவி கோட்டாட்சியா் சிந்து, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், திசையன்விளை வட்டாட்சியா் செல்வகுமாா் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் ஊா் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.