தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

முன்னீா்பள்ளம் அருகே பைக் மோதி மூதாட்டி பலி

முன்னீா்பள்ளம் அருகே தருவையில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 8:34 pm

DIN

முன்னீா்பள்ளம் அருகே தருவையில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவை காந்திநகா் பகுதியைச் சோ்ந்த வேல்மயில் மனைவி தேவி(59). இவா், அப்பகுதியில் உள்ள சாலையை சனிக்கிழமை இரவு கடக்க முயன்றாபோது, அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதாம்.

இதில், பலத்த காயமடைந்த தேவி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்திருப்பது மருத்துவரின் பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.