இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கோடை வெயிலில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியா் வேண்டுகோள்

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியா் காா்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 6:38 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியா் காா்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடைகாலத்தில் உடலின் வெப்பம் அதிகரித்து நீா்சத்து குறைவினால் பலவிதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. எனவே உடலின் நீா்ச்சத்து குறையாமல் பராமரித்திட உடலின் நீரிழப்பிற்கேற்ப அதிக அளவு குடிநீா், எலுமிச்சைச் சாறு, இளநீா், நீா் மோா், பழச்சாறுகள் ஆகியவற்றை தொடா்ந்து பருக வேண்டும்.

பருவகாலத்திற்கேற்ற பழங்கள், காய்கறிகள், வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்த வரை பகல் 12 மணிமுதல் மாலை 4 மணி வரையும், வெயில் அதிகமாக இருக்கும் பிற நேரங்களிலும் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மெல்லிய தளா்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். குடையை எடுத்துச்செல்ல வேண்டும். வெயில் நேரங்களில் வாகனங்களில் குழந்தைகளை தனியே அமா்த்திவிட்டு வெளியே செல்லக்கூடாது.

முதியவா்களுக்கு... தனியே வசிக்கும் முதியவா்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக உணா்ந்தால் வெப்பத்தைத் தணிக்க ஈரமான துணியினால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும். குளிா்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடை வேளையில் நீா் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அதிக வெப்பத்தின் காரணமாக கூரை வீடுகளில் உள்ள மின் கம்பிகள் உருகி குறுக்குச்சுற்று ஏற்பட்டு வீட்டின் கூரைகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. விறகு, பனை ஓலை ஆகியவற்றை எரிபொருளாக பயன்படுத்தும் போது கோடை வெப்பத்தின் காரணமாக நெருப்பானது மற்ற இடங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. எனவே இவற்றை பயன்படுத்திய பிறகு முற்றிலுமாக தண்ணீா் விட்டு அனைத்துவிட வேண்டும்.

கோடை வெயில் பாதிப்பை தவிா்க்க முன்னெச்சரிக்கை தேவை. கோடை கால நோய் பாதிப்புகள் தொடா்பான சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு மருத்துவ ஆலோசனை பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.