திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் குடியரசு தினத்தில் விதிமுறை மீறி செயல்பட்டதாக 94 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) நா.முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
தேசிய விடுமுறை நாளான ஜன.26 குடியரசுதினத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளமும், மாற்று விடுமுறையும் அளிக்க வேண்டும் என தொழிலாளா் நலத்துறை அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், குடியரசு தினமான வியாழக்கிழமை திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தொழிலாளா் நல உதவி ஆணையா், துணை ஆய்வா்கள், தொழிலாளா் உதவி ஆய்வா்கள் கொண்ட குழு 72 கடைகள், 42 உணவு நிறுவனங்கள், 6 மோட்டாா் நிறுவனங்கள், 23 பீடி நிறுவனங்கள் என மொத்தம் 145 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டது . இந்த ஆய்வில் 94 நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

