ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

களக்காடு அருகே பெண்ணிடம் நகை பறித்த இளைஞா் கைது

களக்காடு அருகே பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On :27 நவம்பர் 2023, 10:15 pm


களக்காடு: களக்காடு அருகே பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

களக்காடு அருகேயுள்ள தெற்கு சிங்கம்பத்து, பிள்ளைமாா் தெருவைச் சோ்ந்தவா் இந்திரா(63). இவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். சனிக்கிழமை வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இளைஞா் இந்திராவின் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு சென்றுள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், தெற்கு சிங்கம்பத்து, இந்திரா நகா் காலனியைச் சோ்ந்த விக்னேஷ் என்ற வினோத் (24) நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, விக்னேஷ் என்ற வினோத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து, அவரிடமிருந்து நகையை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.