இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

எம்ஜிஆர் ரசிகர் ஒருவர் தனது மகனின் திருமணத்தன்று செய்த நெகழ்ச்சியான செயல்

எம்ஜிஆரின் ரசிகர் ஒருவர் தனது மகனின் திருமணத்தன்று செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  

News image
Updated On :4 செப்டம்பர் 2023, 7:39 am

DIN

எம்ஜிஆரின் ரசிகர் ஒருவர் தனது மகனின் திருமணத்தன்று செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 
நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சப்பாணி. இவர் அதிமுகவின் வட்ட செயலாளராக இருந்து வருகிறார். 40 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் இருந்து வரும் சப்பாணி எம்ஜிஆரின் தீவிர ரசிகர் மட்டுமல்லாமல் தீவிர பக்தராகவும் திகழ்ந்து வருகிறார். 
நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுக வெள்ளி விழா மாநாட்டின் போது திறக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு நாள் தோறும் தனது சொந்த செலவில் மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர்தான் அடுத்தகட்ட பணிகளை சப்பாணி செய்வார்.  எம்ஜிஆர் தீவிர ரசிகரான இவரின் மகன் சுரேஷ் கோபாலுக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது. 
பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கோயிலில் சுரேஷ்கோபால், நந்தினி தம்பதியருக்கு திருமணம் நடைபெற்ற கையோடு கொக்கிர குளத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு புதுமண தம்பதியர் நேரடியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்து எம்ஜிஆர் சிலைமுன்பு விழுந்து வணங்கி ஆசீர் பெற்றனர். 
இதனைத்தொடர்ந்து சப்பாணின் குடும்பத்தினரும் புதுமண தம்பதியினரோடு இணைந்து எம்ஜிஆர் சிலையை வணங்கினர். எம்ஜிஆரின் ரசிகர் ஒருவர் தனது மகனுக்கு திருமணம் முடித்த கையோடு புதுமணத் தம்பதியுடன் வந்து செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.