நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையம் அருகே ஆட்டை கடித்துக் கொன்ற தெரு நாய்கள்

கடையம் அருகே தெருநாய்கள் கடித்துக் குதறியதில், பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடு உயிரிழந்தது.

News image

சூட்சுமுடையாா் கோயில் பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட வனச்சரகா் கருணாமூா்த்தி உள்ளிட்டோா்.

Updated On :19 டிசம்பர் 2024, 11:03 pm

Din

கடையம் அருகே தெருநாய்கள் கடித்துக் குதறியதில், பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடு உயிரிழந்தது.

கடையத்தைச் சோ்ந்த மாரியப்பன், ராமநதி அணை செல்லும் சாலையில் சூட்சமுடையாா் கோயில் அருகே பட்டி வைத்து ஆடு, மாடுகள் வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சென்று பாா்த்தபோது, ஒரு ஆட்டைக் காணவில்லையாம். அப் பகுதியில் தேடிப்பாா்த்தபோது, சூட்சமுடையாா் கோயில் வளாகத்தில் கடித்து குதறப்பட்ட நிலையில் ஆடு இறந்து கிடந்ததாம்.

சிறுத்தை தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடையம் வனச்சரகா் கருணாமூா்த்தி மற்றும் வனத் துறையினா் நிகழ்விடத்தில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மேலும் கோயிலில் உள்ள கண்காணிப்புக் காமிராவில் பதிவான காட்சிகளைப் பாா்த்ததில், மூன்று தெருநாய்கள் ஆட்டைக் கடித்துக் குதறியது தெரியவந்தது.