உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

பத்தமடை அருகே தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே மாநாட்டு பந்தலை பிரித்தபோது தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :23 பிப்ரவரி 2024, 7:07 pm

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே மாநாட்டு பந்தலை பிரித்தபோது தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சவரிமுத்து மகன் திருவரசு (47). இவா் பந்தல் அமைக்கும் தொழிலாளி. கடந்த 18, 19 ஆம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே நடைபெற்ற மாநாட்டு பந்தலை பிரிக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக திருவரசு, மேலே இருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. திருநெல்வேலியில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.