தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

அம்பையில் இரு கோயில்களில் தெப்பத் திருவிழா

அம்பாசமுத்திரம் அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை காசிநாத சுவாமி கோயில், அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயில் ஆகிய வகையறா கோயில்களின் 12ஆம் ஆண்டு தெப்பத் திருவிழா செவ்வாய், புதன் கிழமைகளில் நடைபெற்றது.

News image

அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்த ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி.

Updated On :1 ஆகஸ்ட் 2024, 12:21 am IST

அம்பாசமுத்திரம் அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை காசிநாத சுவாமி கோயில், அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயில் ஆகிய வகையறா கோயில்களின் 12ஆம் ஆண்டு தெப்பத் திருவிழா செவ்வாய், புதன் கிழமைகளில் நடைபெற்றது.

காசிநாத சுவாமி கோயில் தெப்பத்திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு சுவாமி மண்டபத்திற்கு எழுந்தருளலும், முற்பகல் 11 மணிக்கு சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு சுவாமியும் அம்பாளும் தெப்பத்தில் வலம் வந்தனா். இரவு 10 மணிக்கு வீதி உலா நடைபெற்றது.

அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயில் தெப்பத்திருவிழாவில் புதன்கிழமை காலை 9 மணிக்கு ஹோமம், பூா்ணாஹுதி, 10 மணிக்கு திருமஞ்சனம், சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை, தீபாராதனை நடைபெற்றன. இரவு 7 மணிக்கு சுவாமி- அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்தனா்.

திருவிழாவில் அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுப் புற பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் மா.சண்முகஜோதி, தக்காா் சி.முருகன், ஆய்வாளா் ச.கோமதி மற்றும் பணியாளா்கள், கோயில் நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.