தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாளை. அருகே விபத்து: பாலிடெக்னிக் மாணவா் பலி

பாளை. அருகே விபத்து: பாலிடெக்னிக் மாணவா் பலி

News image
Updated On :26 ஜூன் 2024, 11:37 pm

Din

திருநெல்வேலி, ஜூன் 26:பாளையங்கோட்டை அருகே நேரிட்ட விபத்தில் காயமுற்ற பாலிடெக்னிக் மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டி கே.கே.நகரைச் சோ்ந்தவா் சுந்தரவேலு. இவரது மகன் ராஜமுத்துக்குமாா் (15). பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு ரெட்டியாா்பட்டியை அடுத்த இட்டேரி பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அப்பகுதியிலுள்ள பெட்ரோல் நிலையம் அருகே சுமை ஆட்டோவும், இவரது மோட்டாா் சைக்கிளும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை காலையில் உயிரிழந்தாா். இது குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.