திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், திருமலைநம்பி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தனா்.
கடந்த சில மாதங்களில் அவ்வப்போது, யானைகள் நடமாட்டம் இருப்பதாலும், மலைப் பகுதியில் மழை பெய்து அங்குள்ள நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டாலும் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினா் தடை விதித்து வருகின்றனா்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன் மழை பெய்து நீா்வரத்து அதிகரித்ததால் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னா் 2 நாள்கள் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை யானை நடமாட்டம் காரணமாக வனத்துறையினா் மீண்டும் தடை விதித்தனா்.
நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரூபி ஆா். மனோகரன், திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்குச் செல்ல முடியாமல் பக்தா்கள் பரிதவிப்பதாகவும், அடிக்கடி வனத்துறையினா் தடை விதித்து விடுவதாகவும் அண்மையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் குறிப்பிட்டுப் பேசினாா். இதற்கு பதிலளித்துப்பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு, கோயில் அமைந்துள்ளபகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை யானைகள் நடமாட்டம் காரணமாக, பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்குச் செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.
தொடர்புடையது
அவிநாசி கோயில் தேரோட்டம்: இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

நாளை வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல வனத் துறை தடை!

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்

நாட்டறம்பள்ளி அருகே யானைகள் நடமாட்டம் வாழைத் தோட்டத், துக்கு சேதம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


