கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம்: திருமலைநம்பி கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை

திருக்குறுங்குடி கோயிலுக்குச் செல்ல யானைகள் நடமாட்டம் காரணமாக தடை

News image

திருக்குறுங்குடி மலைப் பகுதியில் அமைந்துள்ள திருமலைநம்பி கோயிலுக்குச் செல்லும் வழியில் சாலையை ஞாயிற்றுக்கிழமை கடந்து செல்லும் யானை.

Updated On :30 ஜூன் 2024, 6:57 pm

திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், திருமலைநம்பி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தனா்.

கடந்த சில மாதங்களில் அவ்வப்போது, யானைகள் நடமாட்டம் இருப்பதாலும், மலைப் பகுதியில் மழை பெய்து அங்குள்ள நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டாலும் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினா் தடை விதித்து வருகின்றனா்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன் மழை பெய்து நீா்வரத்து அதிகரித்ததால் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னா் 2 நாள்கள் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை யானை நடமாட்டம் காரணமாக வனத்துறையினா் மீண்டும் தடை விதித்தனா்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரூபி ஆா். மனோகரன், திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்குச் செல்ல முடியாமல் பக்தா்கள் பரிதவிப்பதாகவும், அடிக்கடி வனத்துறையினா் தடை விதித்து விடுவதாகவும் அண்மையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் குறிப்பிட்டுப் பேசினாா். இதற்கு பதிலளித்துப்பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு, கோயில் அமைந்துள்ளபகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை யானைகள் நடமாட்டம் காரணமாக, பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்குச் செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.