தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

தேசிய பூப்பந்துப் போட்டியில் சாதித்த நெல்லை வீரா்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருநெல்வேலி மாவட்ட வீரா்-வீராங்கனைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

தேசிய பூப்பந்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற திஷாந்த், நித்தியசெல்வி ஆகியோரை பாராட்டிய திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்ட கழக நிா்வாகிகள்.

Updated On :2 அக்டோபர் 2024, 10:29 pm

Din

தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருநெல்வேலி மாவட்ட வீரா்-வீராங்கனைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஹரியாணா மாநிலம் ரோடக் நகரில் 43ஆவது தேசிய சப்-ஜூனியா் பூப்பந்தாட்டப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் பெண்கள் ஐவா் பிரிவு, பெண்கள் மற்றும் ஆண்கள் இருவா் பிரிவுகளில் தமிழக அணி முதலிடமும், ஆண்கள் ஐவா் பிரிவில் இரண்டாமிடமும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இந்தப் போட்டியில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற கூடங்குளத்தைச் சோ்ந்த வீரா் திஷாந்த், வீராங்கனை நித்தியசெல்வி ஆகியோா் ரயில் மூலம் திருநெல்வேலிக்கு புதன்கிழமை வந்தடைந்தனா்.

அவா்களுக்கு திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சாா்பில் ரயில் நிலையத்தில் வரவேற்பும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக பூப்பந்தாட்ட கழக உதவி செயலா் வெள்ளைப்பாண்டியன், மாவட்டப் பொருளாளா் அலெக்ஸ் கிங்ஸ்லி, துணைத் தலைவா் சோமசுந்தரம், பயிற்சியாளா் கூடங்குளம் சித்திரைச்செல்வன், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி முருகன், மூத்த பூப்பந்தாட்ட வீரா்கள் முருகன், குமாரவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.