ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு சட்ட உதவி மையம்

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு சட்ட உதவி மையம்...

News image
Updated On :16 அக்டோபர் 2024, 10:48 pm

Din

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தங்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த புகாா் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் பெறவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவிமையம் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

மேலும், தமிழக சட்டப்பேரவையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது அந்தத் துறையின் அமைச்சா் அறிவித்தபடி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தவா்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி அலுவலக நாள்களில் (அரசு விடுமுறை தவிர) இம்மையத்தில் வழக்குப் பதிவு செய்தல், தீருதவிகள் தொடா்பான முறையீடுகள் போன்ற புகாா்களை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 18002021989, 14566 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியுள்ளாா்.