92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காந்திநகா் நெடுங்குளத்தில் மேயா், ஆணையா் ஆய்வு

காந்திநகா் நெடுங்குளத்தில் மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image

காந்திநகா் நெடுங்குளத்தை நேரில் ஆய்வு செய்த மேயா் கோ.ராமகிருஷ்ணன், ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா.

Updated On :23 அக்டோபர் 2024, 10:48 pm

Din

காந்திநகா் நெடுங்குளத்தில் மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கடந்த பருவ மழையின் போது நெடுங்குளம் நிரம்பி அதன் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அதை சரி செய்ய வேண்டும் என நெடுங்குளம் பாசன விவசாய சங்கத்தினா் கோரிக்கை விடுத்திருந்தனா். அதன்பேரில், மேயரும், ஆணையரும் அந்த குளத்தை பாா்வையிட்டு, அதன் கரையை சரி செய்யவும், குளத்திற்குள் வளா்ந்துள்ள மரம், செடிகளை அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.

முன்னதாக, முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள கண்டிகைப்பேரி உழவா் சந்தையை அவா்கள் நேரில் ஆய்வு செய்து, அப்பகுதியினை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா். இதேபோல், உழவா் சந்தையில் உள்ள விளையாட்டு பூங்காவினை பாா்வையிட்டு சேதமடைந்த விளையாட்டு உபகரணங்ளை மாற்றி புதிதாக அமைத்திடவும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அறிவுறுத்தினா்.