92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மூலைக்கரைப்பட்டி அருகே விபத்தில் ஆசிரியை பலி

மூலைக்கரைப்பட்டி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஆசிரியை பலியானாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 10:51 pm

Din

மூலைக்கரைப்பட்டி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஆசிரியை பலியானாா்.

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் மேற்குத் தெருவை சோ்ந்தவா் ஜெபா பாலன். விவசாயி. இவருடைய மனைவி பியூலா நேசமலா் (51). இவா், பருத்திப்பாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை காலை வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றபோது, மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள பெட்ரோல் நிலையம் அருகே அவரது வாகனம் மீது காா் மோதியதாம்.

இதில் பலத்த காயம் அடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.