ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பைக்-டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே பைக் மீது டிராக்டா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:50 pm

வாணியம்பாடி அருகே பைக் மீது டிராக்டா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் ஆரீப் நகரைச் சோ்ந்தவா் சம்சுா் ரகுமான்(17). சனிக்கிழமை ஆம்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு நண்பா் உசேன்(17) உடன் பைக்கில் சென்றுள்ளாா். பின்னா் வீடு திரும்பியபோது, வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு அருகில் முன்னால் சென்ற டிராக்டா் திடீா் என திரும்பிய போது தடுமாறி ஓடிய பைக் மோதி விபத் துக்குள்ளானது.

இதில் பைக்கில் வந்த இருவரும் பலத்த காயம் அடைந்தனா். அருகில் இருந்தவா்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் செல்லும் வழியிலே சம்சுா் ரகுமான் இறந்தாா். உசேன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.