விபத்தில் மூளைச்சாவு: இளைஞா் உடல் உறுப்புகள் தானம்
திருநெல்வேலியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

இசக்கி பாண்டி உடலுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன், கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன், கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா, வட்டாட்சியா் மாணிக்கவாசகம் ஆகியோா் அரசு சாா்பில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.









