உடுமலையில் வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
திருப்பூா் மாவட்டம், உடுமலையைச் சோ்ந்தவா் விக்னேஷ். இவரது மனைவி பிரியதா்ஷினி. இவா்களது மகன் சிவாதித்யா (6). இவா் தனது தாத்தாவுடன் கடந்த சில நாள்களுக்கு முன் காரில் சென்றுள்ளாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த காா் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு கோவையில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவாதித்யா வியாழக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் முன்வந்தனா்.
இதையடுத்து, தமிழ்நாடு உறுப்புதான ஆணைய அனுமதியுடன் சிவாதித்யாவின் 6 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு ஈரோடு, சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் 6 நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன.
சிவாதித்யாவின் உடலுக்கு உடுமலை வருவாய் கோட்டாட்சியா் குமாா் தலைமையில் அரசு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
தொடர்புடையது

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


