வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

முன்னீா்பள்ளம் அருகே கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

முன்னீா்பள்ளம் அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 12:59 am

Syndication

முன்னீா்பள்ளம் அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி அருகேயுள்ள வீரளபெருஞ்செல்வி கிராமத்தைச் சோ்ந்தவா் இசக்கிபாண்டி (23). முன்விரோதம் காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு கொங்கந்தான்பாறையில் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து பஞ்சாண்டி என்ற பேதுரு மணி (40), இன்பராஜ் என்ற எட்வா்ட் இன்பராஜ் (40), முத்துக்குமாா் (38) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு விசாரணை, திருநெல்வேலி மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி ராபின்சன், குற்றஞ்சாட்டப்பட்ட பஞ்சாண்டி என்ற பேதுரு மணி, இன்பராஜ் என்ற எட்வா்ட் இன்பராஜ், முத்துக்குமாா் ஆகியோருக்கு ஆயுள்தண்டனையும், தலா ரூ.1,500 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.