இம்மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகவே தொடா்ந்து மிதமான மழை பெய்து வந்த நிலையில் புதன்கிழமை காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது. திருநெல்வேலி, மேலப்பாளையம், பாளையங்கோட்டை, கேடிசிநகா், டக்கரம்மாள்புரம், தச்சநல்லூா், தாழையூத்து, சங்கா்நகா், நாரணம்மாள்புரம், கல்லூா், சுத்தமல்லி, பேட்டை, அபிஷேகப்பட்டி, முன்னீா்பள்ளம் பகுதிகளில் சுமாா் முக்கால் மணி நேரம் இடைவிடாமல் மழை கொட்டித்தீா்த்தது. சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியதால், திருநெல்வேலி சந்திப்பு, முருகன்குறிச்சி, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.