நெல்லையில் நவ. 21-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நவ. 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
Published on

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நவ. 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், கல்விச் சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று வேலைவாய்ப்பை பெறலாம். பணி நியமனம் பெற்றாலும் அரசு வேலைக்கான பதிவு மூப்பு ரத்தாகாது.

வேலைநாடுநா்களும், பணி வழங்கும் தனியாா் நிறுவனங்களும் இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆஃபிஸ் என்ற டெலிகிராம் சானல் இணைப்பில் தொடா்புகொள்ளலாம்.

மேலும், போட்டித் தோ்வுகளுக்கு தயாா் செய்யும் மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com