கள்ளக்குறிச்சியில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சியில் நாளை சிறிய அளவிளான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.13) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பாக ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.
அதன்படி வருகிற வெள்ளிக்கிழமை(பிப்.13) நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் தமிழகத்தை சாா்ந்த வங்கி, நிதி, வாகன உற்பத்தி, சில்லரை விற்பனை துறையை சாா்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களுக்கான தேவையான பணியிடங்களை நிரப்ப உள்ளனா். இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, பி.டெக் முடித்தவா்கள் இணையதளம் வழியாக தங்களை பதிவு செய்து, முகாமில் கலந்துகொள்ளலாம். இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு, அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

