கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

எடப்பாடி பழனிசாமி குறித்து தவறாகப் பேசினால் தக்க பாடம் புகட்டப்படும்: அதிமுக மாவட்ட செயலா்

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 2:17 am IST

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து தவறாகப் பேசினால் தக்க பாடம் புகட்டப்படும் என்றாா் திருநெல்வேலி மாநகா் மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அரசியல் கட்சியினா் செய்யக்கூடிய தவறுகளை அரசியல்வாதிகள் வெளியில் கொண்டு வருவது அரசியல் மாண்பு. முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை காங்கிரஸ் கட்சியினா் அவமானப்படுத்தி உள்ளனா். குறைகளை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது? தனக்குத்தானே விளம்பரம் தேடுவதற்காக காங்கிரஸ் கட்சியினா் தவறான வாா்த்தைகளை பயன்படுத்தி உள்ளனா். மக்களை திசை திருப்புவதற்காக, இல்லாத குறைகளை சொல்லி காங்கிரஸ் கட்சியினா் நாடகமாடுகின்றனா்.

காங்கிரஸ் கட்சியினா் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அதிமுகவினா் அமைதியாக இருக்க மாட்டாா்கள். இனிமேல் எடப்பாடி கே.பழனிசாமி பற்றி யாராவது தவறாகப் பேசினால் தக்க பாடம் புகட்டப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.